பழங்கள்மூலிகைகள்

சீத்தாப்பழம் பயன்கள்

சீத்தாப்பழம் (custard apple ) பழவகைகளில் தனிப்பட்ட சுவையும், மணமும் உடையது. குளுகோசும், சுக்ரோசும் சம அளவில் இருப்பதால் அதிக இனிப்பு சுவையை தருகிறது.நினைவாற்றலை அதிகரிக்கும், இதில் உள்ள சத்துக்கள் இதயத்தை சீராக இயங்க உதவுகிறது.

காசநோயை குணமாக்கும், குடல் புண்களை குணமாக்கும். உடல் சோர்வை போக்கும். சீத்தாப்பழம் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த சக்தியை தரும் டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் இதன் இலை, தோல், விதை, மரப்பட்டை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

சீத்தா வெப்ப மண்டல அமெரிக்க பகுதிகளில் தோன்றிய அனோனா வகையை சார்ந்த தாவர இனமாகும். உலகமெங்கும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சீத்தாப்பழம், சீதாப்பழம் என்றும் ஈழத்தில் அன்னமுன்னா என்றும் அழைக்கப்படுகிறது.

சீத்தா இலைகள்

இதன் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் இலை அருமருந்தாகும்.
இலைகளை அரைத்து புண்களுக்கு மேல் பூசி வர உடனடியாக குணமாகும்.

எலும்புகள் வலுவடையும்

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வந்தால் உடலை வலுவாக்கும். எலும்புகள் பலமடையும். பற்கள் உறுதிபெறும்.

இதயம் பலம் பெற

இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வர காசநோய்கள், ஆஸ்துமா கட்டுப்படும்.

காச நோய்க்கு சிறந்தது

ஆரம்பத்தில் உள்ள காசநோய்க்கு சீத்தாப்பழம் சிறந்த மருந்தாகும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் கட்டுக்குள் வரும்.

இரத்தசோகைக்கு

சீத்தாப்பழம் இரத்த விருத்தி செய்ய உதவுகிறது. இரத்த சோகையை போக்கும். மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும்.

உடல் பருமன்

அதிகப்படியான உடல் எடை உள்ளவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழம் சாப்பிட்டு வர ஊளைச்சதை குறைந்து உடல் எடை கட்டுக்குள் வரும்.

சிறுநீர் பிரச்சனை தீர

சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சீத்தாப்பழத்தை விதைகளை நீக்கி அதில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சிறுநீர் பிரச்சினை தீர்ந்து சிறுநீர் தாராளமாக பிரியும், நீர்க்கடுப்பு தீரும்.

பித்தம் விலக

இஞ்சி சாறு, கருப்பட்டியுடன் சீத்தாப்பழத்தை சேர்த்து சாப்பிட பித்தம் விலகும்.

நல்ல தூக்கத்திற்கு

இரவு இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு சீத்தாப்பழம் சேர்த்து சாப்பிட நன்கு தூக்கம் வரும். தூக்கத்திற்கு சீத்தாப்பழம் சிறந்ததாகும்.

முகப்பருக்கள் மறைய

சீத்தாப்பழத்தின் சதை பகுதியை எடுத்து சிறிது உப்பு சேர்த்து முகப்பருவின் மேல் தடவி வர முகப்பரு மறையும்.

தலைமுடி பளபளப்பாக

இதன் விதைகளை நன்றாக காயவைத்து அரைத்து பொடியாக்கி சம அளவு பாசிப்பயறு மாவு சேர்த்து கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி நல்ல மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். மேலும் பேன்கள் அழிந்துவிடும்.

முடி உதிர்தலுக்கு

சீத்தாப்பழ விதை பொடியுடன் கடலை மாவு சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

பொடுகு மறைய

பாசிப்பயறு, வெந்தயம் இரண்டையும் இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து அதில் சீத்தா விதை பொடியை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து பிறகு குளித்து வர பொடுகு மறையும்.

தேமல் மறைய

பூண்டுடன் சீத்தாப்பழத்தை சேர்த்து அரைத்து தேமல் மீது பூசிவர தேமல் மறையும்,

சீத்தாப்பழச்சாறு

சீத்தாப்பழச்சாறு அருந்தி வர சரும வறட்சி நீங்கும். நரம்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் சி கணிசமான அளவு இருப்பதால் சளி பிடிக்காமல் தடுக்கிறது. சளி பிடித்தவர்கள் சாப்பிட்டாலும் சளியை குணமாக்கும், வேறு பாதிப்புகளை தராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =

error: Content is protected !!