மூலிகைகள்

நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்

நெல்லிக்காய் இதயத்திற்கு வலிமையை தருகிறது.தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும்.

தொற்று நோய்கள் எதுவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும். நெல்லிக்காயை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.

கண் நோய்

ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.

தலைமுடிக்கு

அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும், நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை முடி நன்கு வளரும், பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.

உடல் பலம்

நெல்லிக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும், குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும்.

சர்க்கரை வியாதி

  • நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
  • ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.

இரத்தசோகை

நெல்லிக்காய் இரத்தசோகைக்கு இயற்கை டானிக் தினமும் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வந்தால் இரத்தசோகை குணமாகும். மேலும் எலும்புகளுக்கு, குடல் சம்பந்தமான நோய்களுக்கும் சிறந்தது.

முடக்கு வாதம்

நெல்லிக்காய்ச்சாற்றில் சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதம் குணமாகும்.

உடல் சூடு குறைய

நெல்லிக்காயை விதையை நீங்கி அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

*இவ்வாறான வழிகளில் நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், மரணத்தை கூட தள்ளிப்போடலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =

error: Content is protected !!